4.1.12

உயிரோசையில் வெளியான எனது கவிதை.




வட்டக்கவிதைகள்
சதுரக்கவிதைகள்
செவ்வகக்கவிதைகள்
முக்கோணக்கவிதைகள்
செங்குத்துக்கவிதைகள்
அடுக்குக்கவிதைகள்
என ஏதாவதொரு வடிவத்தில்
எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள்
நான் முதன்முதலில் எழுதத் தொடங்கியது
இதய வடிவினாலான ஒரு கவிதையைத்தான்
அது இன்னும் முற்றுப்பெறாமல்
பாதி வடிவத்திலேயே இருக்கிறது.

உயிரோசையில் வெளியான எனது கவிதை.




ஆழ்ந்த நித்திரையில்
இருக்கிறேன்

நித்திரையில் நீளும் கனவில்
இருக்கிறேன்
நீளும் கனவில் விழிப்பில் 
இருக்கிறேன்
விழிப்பில் கவனக்குவிப்பில் 
இருக்கிறேன்
கவனக்குவிப்பில் விழிப்பில் 
இருக்கிறேன்
விழிப்பில் நீளும் கனவில் 
இருக்கிறேன்
நீளும் கனவில் நித்திரையில் 
இருக்கிறேன்.