சிறுவயதில்,
கடவுளைப் பற்றிய
பயமிருந்தது எனக்கு.
ஒரு ஆவணிமாத வெள்ளிக்கிழமையில்
முன்னிரவுக்குப் பிந்தைய பொழுதில்
அரிக்கேன் விளக்குகளின்
மங்கிய வெளிச்சத்தில்
வெட்டுப்பட்ட ஆட்டின்
இரத்தம் பீறிடும் கழுத்தில்
வாய் வைத்திருப்பார்
ஆவேசங்கொண்ட பூசாரி.
பக்கத்துப் பெரிய
பூவரச மரத்துக்குப் பின்னால்
ஒளிந்து கொள்வேன் நான்.