29.10.11


வானமெங்கும்
பறந்து திரிய 
போதிய பலமில்லாதவை 
எனது இறக்கைகள்
என்பதை உணர்ந்திருந்தேன்.


பறக்க வேண்டும்
சுதந்திரமாய் பறக்க வேண்டும்
பலத்துடன் பறக்க வேண்டும்.
முடிவெடுத்தேன்

உயரத்துக்கும்
அகலத்துக்கும்
அளவுகள் வகுத்தேன்.

பறக்க முடிந்த 
தூரத்தை 
எல்லைகளாக்கினேன்.

என்னுடைய 
வானத்தை 
நானே உருவாக்கினேன்.

என் வானத்தினுள்
என்னைப் போலவே 
எவரும் பிரவேசிக்கலாம்.
எல்லைக்கோடுகளையும்
வரைந்து கொள்ளலாம்.

ஆனாலும் இது என் வானம்.
நானொரு சுதந்திரப் பறவை.