உனக்கான எனது கடைசிக்கடிதம்
கொண்டு வருகிறேன்.
வழக்கம்போலவே,
இதையும் நிராகரித்துவிடு.
வசவுச்சொற்களால் அவமானப்படுத்து.
இல்லையேல்,
உனக்குத் தோன்றுகிற
விதத்தில் தண்டித்துவிடு.
ஒருவேளை,
இவையெல்லாம் விடுத்து,
நீ என்னை நேசிப்பதாய்ச்
சொல்லிவிட்டால்,
உன் மீதான என் நேசம்
தொலையக் கூடும்.