8.3.04

கடைசிக்கடிதம்

உனக்கான எனது கடைசிக்கடிதம்

கொண்டு வருகிறேன்.

வழக்கம்போலவே,

இதையும் நிராகரித்துவிடு.

வசவுச்சொற்களால் அவமானப்படுத்து.

இல்லையேல்,

உனக்குத் தோன்றுகிற

விதத்தில் தண்டித்துவிடு.

ஒருவேளை,

இவையெல்லாம் விடுத்து,

நீ என்னை நேசிப்பதாய்ச்

சொல்லிவிட்டால்,

உன் மீதான என் நேசம்

தொலையக் கூடும்.