9.6.03

இந்தக் கேள்விகள்

நிகழ்ந்த கணம் எது?

ஈர்த்த செய்கை என்ன?

பேசாத மௌனம் எதற்கு?

தெரிவிக்க இயலாத வருத்தம் எப்படி?

எழுதி வைத்திருக்கும் கடிதங்கள் எத்தனை?

எல்லாக் கேள்விகளுக்கும் பதில் நானறிவேன்.

எதைக் குறித்து இக்கேள்விகள்

என்பதையேனும் நீயறிவாயா?