கொண்டாட்டங்களின் தேவதை அவள்.
என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியபடி
சிரித்துக் கொண்டிருந்தாள்.
"கொண்டாடத் தெரியாதவன் என்பதால்
எள்ளி நகைக்கிறாயா" எனக் கேட்டேன்
"இல்லை, நான்தான்
கொண்டாட்டங்களின் தேவதை என
நம்பிக் கொண்டிருக்கிறாயே
அதை எண்ணி நகைக்கிறேன்" என்றாள்.