16.12.11


கடவுள் இல்லையென்று சொல்லித்திரிந்த

கருப்புச்சட்டைக்காரனொருவன் 

கனவில் ஏதோ காட்சி தந்ததென
கருப்புச்சட்டை வேட்டியோடு புதிதாக

மாலையும் போட்டுக்கொண்டான்.


'நேத்து வரைக்கும் நல்லாத்தேன்' இருந்த

கொமரேசன் மவன் சேகரை

காந்தக்கண் பெண்ணொருத்தி கழுத்தறுத்தாளாம்

ஆடைகளைக் கிழித்துக்கொண்டு
அழுக்குடலோடு சாலைகளில் திரிகிறான்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக