22.11.11





இவன் சிரிக்கிறான்

இவன் ரசிக்கிறான்


இவன் காதலிக்கிறான்


இவன் ஏமாறுகிறான்


இவன் கோபம் கொள்கிறான்


இவன் கவிதை எழுதுகிறான்



இவன் இவனை வேடிக்கை 


பார்க்கத் தொடங்குகிறான்.



பின்னொருநாள் இவன் இவனை


உணர்ந்துவிட்டதாய் இவனிடமே 


சொல்லிக்கொள்கிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக